புல்லாங்குழல்களின் கதை
புலம் பெயர்ந்த
புல்லாங்குழல்கள்
அடுப்பூதுவதில்
ஆனந்தமடைந்தன
மூச்சுவிடக்காற்று கிடைத்ததால்!
உள்ளூர்
ஊமைகளுக்குப்
பாடற்பயிற்சி அளிக்கலாம்
என்ற முயற்சிக்கு வரவேற்பிருந்தது!
புற்றுப்பாம்புகள்
பாலுக்கும் முட்டைக்கும் மயங்கி
சீறுவதை மறந்து விட்டன!
ஊருக்குள் பாம்புப்பயம் போய்விட்டதால்
வளர்ப்புப்பிராணியாக வத்துக்கொள்ள
பலர் முன்வந்தனர்!
No comments:
Post a Comment